/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மஞ்சூர்; அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில் உள்ளது. மாதந்தோறும் இக்கோவிலில் கிருத்திகை பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு மாதம் கிருத்திகை பூஜையை ஒட்டி காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணியளவில் கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜிசுவாமி தலைமையில் , ஆசிரம மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில், முருகபெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட, 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பஜனை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.