உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 50 ஆயிரம் குடும்பங்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ்

50 ஆயிரம் குடும்பங்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ்

அன்னுார்;அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் தேதி நடைபெறுகிறது இதற்காக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், அயோத்தியிலிருந்து வரவழைக்கப்பட்ட அட்சதை பெருமாள் பாதத்தில் வைக்கப்பட்டு நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.இதையடுத்து அந்த அட்சதை 21 ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது. இது குறித்து, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூறுகையில், 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ், ராமர் படம், அட்சதை ஆகியவை வழங்கப்படுகிறது. அன்னுார் ஒன்றியத்தில், 50,000 குடும்பங்களுக்கு அழைப்பிதழ் தர திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர். இந்நிகழ்ச்சியில் கர சேவையில் பங்கேற்ற செல்வன் அட்சதையை பெற்றுக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். அன்னுார் வட்டார தலைவர் யுவராஜ் சிகாமணி, தெற்கு பகுதி பொறுப்பாளர் கணேசன், வடக்கு பகுதி பொறுப்பாளர் கோகுல் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை