உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

கூடலுார் : கூடலுார் புளியம்பாறை மட்டம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.கூடலுார் புளியம்பாறை மட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா, 18ம் தேதி காலை 7:00 மணிக்கு விநாயகர்வழிபாடு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 3:00 மணிக்கு முளைப்பாரி மற்றும் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 4:30 மணி முதல் சிறப்பு பூஜைகளும், முதல் கால பூஜை, பூர்ணாஹுதி தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று முன்தினம் காலை, 8:30 மணி முதல் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மூன்றாம் கால யாகபூஜை, சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று காலை, 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, யாக பூஜைகள் தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை