உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

நீலகிரியில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 9 தலைமை ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில அரசு சார்பில் நடப்பாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் 9 தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், செவனன், அரசு மேல்நிலைப்பள்ளி காத்தாடி மட்டம்; சந்திரன், அரசு மேல்நிலைப்பள்ளி கூடலூர்; ஜோஸ், அரசு மேல்நிலைப்பள்ளி பிதர்காடு;ராமலிங்கம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மஞ்சூர்; மனோகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெட்டட்டி; பெள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கொல்லிமலை; மாதன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிளன்மார்கன்; பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பிதர்காடு; கேசவன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெள்ளேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 5ம் தேதி சென்னையில் கல்வி துறை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை