காட்டேரி பூங்காவில் மலர் தொட்டிகள் தயார்படுத்தும் பணி
குன்னுார், ; குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்காவில் நடப்பாண்டு, கோடை சீசனில், முதல் முறையாக மே, 31, ஜூன் 1ம் தேதி என இரு நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. பூங்காவில் சீசனில் அலங்கரிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர்கள் வைக்க தோட்டக்கலை துறை முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.