மேலும் செய்திகள்
தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு
11-Oct-2025
குன்னுார்: தென் மாநில அளவில், தேயிலை ஏலங்களில், 36.14 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 41வது ஏலத்தில், '14.31 லட்சம் கிலோ இலை ரகம்; 4.81 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 19.12 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில், '13.17 லட்சம் கிலோ இலை ரகம்; 3.83 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 17 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 96.84 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 16.46 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, ஒரு லட்சம் கிலோ வரத்து; 1.78 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது. சராசரி விலையில் ஒரு ரூபாய் ஏற்றம் கண்டது. இதனால், ஒரே வாரத்தில், 1.19 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்தது. டீசர்வ் ஏலம் நீலகிரி, கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், டீசர்வ் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. அதில், 1.29 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.28 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 84.71 ரூபாயாக இருந்தது; 1.09 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 23 ஆயிரம் கிலோ வரத்தும், 4 ஆயிரம் கிலோ விற்பனையும் குறைந்தது. சராசரி விலையில் மாற்றம் இல்லை. 3 லட்சம் ரூபாய் வருவாய் குறைந்தது. கோவை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 5.23 லட்சம் கிலோ வந்ததில், 4.58 லட்சம் கிலோ என விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 123.57 ரூபாயாக இருந்தது. 5.66 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 75 ஆயிரம் கிலோ வரத்து; 89 ஆயிரம் கிலோ விற்பனை ஏற்றம் கண்டது. இதனால் 94 லட்சம் ரூபாய் வருவாய் உயர்ந்தது. எனினும், சராசரி விலையில் கிலோவிற்கு ரூ.4.33 சரிந்தது. கொச்சி ஏல மையத்தில், 8.42 லட்சம் கிலோ வந்ததில், 7.72 லட்சம் கிலோ 91.61 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை, 167.95 ரூபாய் என இருந்தது. 12.96 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 14 ஆயிரம் கிலோ வரத்து அதிகரித்தது; 15 ஆயிரம் கிலோ விற்பனை குறைந்தது; 20 லட்சம் ரூபாய் வருவாய் சரிந்தது. இந்த முறை, குன்னுார் மற்றும் கோவை ஏலங்களில் ஏற்றம் கண்டதால் வருவாய் உயர்ந்தது. தென் மாநில அளவில், 36.17 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 1.90 கோடி ரூபாய் மொத்த வருவாய் ரூபாய் அதிகரித்தது.
11-Oct-2025