தேயிலை ஏலத்தில் விற்பனை சரிவு ஒரே வாரத்தில் ஒரு கோடி ரூபாய் குறைவு
குன்னுார் : குன்னூரில் நடந்த தேயிலை ஏலங்களில், வரத்து அதிகரித்த நிலையில், விற்பனை சரிந்ததால், ஒரு கோடி ரூபாய் மொத்த வருமானம் குறைந்தது.குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 3வது ஏலத்தில், '14,75 லட்சம் கிலோ இலை ரகம்; 3.95 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 18.70 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '12.56 லட்சம் கிலோ இலை ரகம்; 2.44 டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 15.00 லட்சம் கிலோ விற்பனையானது.'சராசரி விலை கிலோவிற்கு, 124.73 ரூபாய்,' என, இருந்தது. கிலோவிற்கு, 2 ரூபாய் வீழ்ச்சியடைந்தது. மொத்த வருமானம், 18.71 கோடி ரூபாய் கிடைத்தது. ஒரு லட்சம் கிலோ வரத்து அதிகரித்த நிலையில், கடந்த ஏலத்தை விட, 85 ஆயிரம் கிலோ விற்பனை சரிந்தது. 'டீசர்வ்' ஏல விபரம்
நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் 'டீசர்வ்' மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில் ஏலத்திற்கு, 1.19 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது; 1.01 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 116 ரூபாயாக இருந்தது. ஒரே வாரத்தில் கிலோவுக்கு, 4 ரூபாய் சரிந்தது; 1.17 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.இரு ஏல மையங்களில் சேர்த்து, 19.88 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. ஒரே வாரத்தில் ஒரு கோடி ரூபாய் மொத்த வருமானமும் குறைந்தது. சராசரி விலை அதிகம்
கோவை ஏல மையத்தில், 5.69 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 3.94 லட்சம் கிலோ விற்பனையானது. 69.27 சதவீதம் விற்ற நிலையில், சராசரி விலை கிலோவிற்கு, 147. 27 ரூபாய்,' என, இருந்தது. கொச்சி ஏல மையத்தில், 12.62 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 11.10 லட்சம் கிலோ என 87.95 சதவீதம் விற்றது. சராசரி விலை,172.41 ரூபாய் என இருந்தது.