உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடை செயல்படாது

இரண்டு நாட்கள் டாஸ்மாக் மதுக்கடை செயல்படாது

ஊட்டி ; திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை ஒட்டி இரண்டு நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் செயல்படாது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரியில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஓட்டல் பார்கள் இம்மாதம், 15ம் தேதி நடக்கும் திருவள்ளுவர் தினம்; 26 ம் தேதி நடக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு இயங்காது. மேற்கண்ட நாளில் கட்டாயமாக, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் , ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் குறிப்பிட்ட நாளில், நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள் மற்றும் ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில், ஏ.டி.எஸ்.பி., ( மதுவிலக்கு) 0423---2223802; உதவி கமிஷனர் ( ஆயம்) ஊட்டி - 0423--2443693; மாவட்ட மேலாளர் ( டாஸ்மாக்) குன்னுார் - 0423--2234211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை