மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
17 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
17 hour(s) ago
மேட்டுப்பாளையம்: குட்டையூர் அருகேயுள்ள,சாய்பாபா கோவிலில், இன்று ஏழாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், குட்டையூர் மாதேஸ்வரன் மலை அருகே, சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு கோவில் கட்டி ஆறு ஆண்டுகள் முடிந்து, ஏழாம் ஆண்டு துவங்குகிறது. இதை முன்னிட்டு இன்று ஆண்டு விழா நடைபெற உள்ளது. காலை, 5:30 மணிக்கு ஆரத்தியும், அதைத் தொடர்ந்து சாய் சேவா சங்கத்தின் பஜனையும், நடைபெற உள்ளது. தொடர்ந்து சிறப்பு உற்சவம் நடைபெறுகிறது. மாலை, 4:30 மணிக்கு லிங்காபுரம் கலைவாணி வள்ளி கும்மி குழுவினரின், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை, 6:30 மணிக்கு அபிஷேக் ராஜு மற்றும் சவுமியா அபிஷேக் ராஜு குழுவினரின் சொற்பொழிவும், பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சத்குரு சாய் சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago