மேலும் செய்திகள்
பஸ்--ஆட்டோ மோதல்; விபத்தில் இருவர் பலி
17-Jul-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, போதை மாத்திரை உடன் பஸ்சில் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாளையாரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார், வாகன சோதனை நடத்தினர். அப்போது, கோவை பகுதியில் இருந்து, கொச்சி நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி பயணியரிடம் சோதனையிட்டனர். அப்போது, பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரி பகுதியைச் சேர்ந்த ஷம்ஷாத், 27, முகமது ராபி, 23, ஆகியோரின் பையில், 7.31 கிராம் கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு போதை மாத்திரை கடத்தி செல்வது தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
17-Jul-2025