உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தண்ணீர் பள்ளம் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும்: வனத்துறையின் நடவடிக்கை அவசியம்

தண்ணீர் பள்ளம் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும்: வனத்துறையின் நடவடிக்கை அவசியம்

கோத்தகிரி; கோத்தகிரி தண்ணீர் பள்ளம் நீர் ஆதாரத்தை, மாசு அடையாமல் வனத்துறை பாதுகாப்பது அவசியம்.கோத்தகிரி -கோடநாடு சாலையில், தண்ணீர் பள்ளம் பகுதியில், வறட்சி நாட்களில், வன விலங்குகள் தண்ணீர் பருக ஏதுவாக வனத்துறை சார்பில், தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட சோலையில் இருந்து உற்பத்தியாகும் இந்த தண்ணீர்,வன விலங்குகளுக்கு பயன்பட்டு வருகிறது. தவிர, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள பழங்குடியின குடியிருப்புகளுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், சுகாதாரமான இந்த தண்ணீரை, இந்த வழியாக வாகனங்களில் சென்று வருபவர்கள், 'கேன்' களில் நிரப்பி, குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கோத்தகிரி பேரூராட்சி பகுதியில், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், இந்த நீர் ஆதாரத்தில் இருந்து, வாகனங்களில் தண்ணீர் நிரப்பி குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், சமீப காலமாக இந்த தண்ணீரை பயன்படுத்தி வாகனங்கள் கழுவுவது தொடர்கிறது. இதனால், வாகனங்களில் இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகள், தண்ணீரில் கலந்து மாசடைந்து வருகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் உடல் உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது. வனத்துறை சார்பில், 'வாகனங்களை கழுவ கூடாது : மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், வனத்துறையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், வாகனங்கள் கழுவப்படுவது தொடர்கிறது. எனவே, வனத்துறை சார்பில், ஆட்கள் உள்ளே செல்லாதவாறு, வேலி அமைத்து நீர் ஆதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை