மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, உள்ள நரசிங்கபாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் அருமைராஜ். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளரான இவரது மகன் பிரேம்குமார், 21. டிப்ளமோ மெக்கானிக் படித்து விட்டு, கூலி வேலை செய்து வருகிறார்.இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால், அந்தப் பெண், பிரேம்குமாரிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அந்தப் பெண் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த பிரேம்குமார், பஸ் ஸ்டாப் முன் உள்ள சாலையில் பெட்ரோல் குண்டை வீசி விட்டு, தப்பி ஓடினார்.தகவல் அறிந்த, சம்பவ இடத்திற்கு சென்ற மீன்சுருட்டி போலீசார், விசாரணை நடத்தி, பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை கைது செய்தனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025