உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஆயத்த ஆடை பயிற்சி மாஜி படைவீரர் குடும்ப மகளிருக்கு அழைப்பு

ஆயத்த ஆடை பயிற்சி மாஜி படைவீரர் குடும்ப மகளிருக்கு அழைப்பு

பெரம்பலூர்: திருப்பூரில் இலவசமாக பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்கும் பயிற்சி பெற முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் அலுவலகம் வெயியிட்ட அறிக்கை: திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்க முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்- மகளிருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இலவசமாக இரண்டு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியின் போது தங்கும் இடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். எனவே, திருப்பூர் சென்று பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, மகள், விதவையர் ஆகியோர் தங்களது விருப்பத்தினை வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பம் மூலம் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி