அனுமதியின்றி செயல்பட்ட கல் குவாரி கண்டுபிடிப்பு
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், வெங்கலம் கிராமத்தில் சட்ட விரோதமாக கல் குவாரி செயல்படுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு புகார் வந்தது. கனிம வளத்துறை அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது, ஐந்து ஆண்டுகளாக அரசு அனுமதியின்றி கல் குவாரி செயல்பட்டு வந்ததும், அதை கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகோதர்களான நல்லுசாமி, வெள்ளைசாமி நடத்தியதும் தெரிந்தது. அங்கு, நிறுத்தியிருந்த இரண்டு ஹிட்டாச்சி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.