உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயன்றவர் கைது

ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயன்றவர் கைது

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கிளிக்குடி பகுதியில் மணல் திருட்டு நடந்ததை அடுத்து. ஆர்.டி.ஓ., தெய்வநாயகி சோதனை நடத்தினார்.வளையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஆற்று மணல் ஏற்றி வந்த லாரியை ஆர்.டி.ஓ., தடுக்க முயன்றார். அப்போது, லாரியை நிறுத்தாத டிரைவர் சங்கர், 40, ஆர்.டி.ஓ., கார் மீது மோதினார். காரின் ஒரு பகுதியில் லாரி மோதி நின்று விட்டது; லாரி டிரைவர் தப்பியோடி விட்டார்.புகாரின் படி, அன்னவாசல் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து லாரி டிரைவர் கவிநாரிபட்டியைச் சேர்ந்த சங்கரை நேற்றுமுன் இரவு கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளரான அ.தி.மு.க., டிரைவர் அணி நிர்வாகி சுந்தரம், 47, என்பவரை தேடி வந்தனர்.சொக்கம்பட்டியில் பதுங்கியிருந்த சுந்தரத்தை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை