உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நடிகர் சீனிவாசன் செக் மோசடி  வழக்கு; ஏப்.,2க்கு தள்ளி வைப்பு 

நடிகர் சீனிவாசன் செக் மோசடி  வழக்கு; ஏப்.,2க்கு தள்ளி வைப்பு 

ராமநாதபுரம் : -செக் மோசடி வழக்கில் நடிகர் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில்ஆஜராகாததால் மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கை ஏப்.2க்கு தள்ளி வைத்தார்.தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 55. இவர் வங்கி கடன் பெறுவதற்காக நடிகர் சீனிவாசனிடம் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். கடன் பெற்றுத்தரவில்லை.கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பி கேட்டுள்ளார். சீனிவாசன் ரூ.14 லட்சத்திற்கு வங்கி காசோலை வழங்கினார். வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தது. ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் முனியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நடிகர் சீனிவாசன்நேற்று ஆஜராகவில்லை. மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கை ஏப்.2க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி