புகையிலை பொருட்கள் பறிமுதல்
கீழக்கரை : கீழக்கரை அருகே கோரைக்குட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான சரக்கு வேனை போலீசார் சோதனையிட்டனர். வேனில் இருந்த 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த கீழக்கரை போலீசார் கீழக்கரையைச் சேர்ந்த ரூமன், கோரைக்குட்டத்தை சேர்ந்த ரிபாய்தீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.