உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரின் காவல் ஜூலை 24 வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரின் காவல் ஜூலை 24 வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம்:- இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள், 22 பேரின் காவலை ஜூலை 24 வரை நீட்டித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 23ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் 3 படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நீதிமன்ற வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 22 பேரையும் அந்நாட்டு போலீசார் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களின் நீதிமன்ற காவலை ஜூலை 24 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 25 நாட்களாக சிறையில் வாடும் மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என்ற ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவர்களின் குடும்பத்தினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீனவர்களை விடுவிக்கக் கோரி இன்று (ஜூலை 19) ராமேஸ்வரத்தில் ரோடு மறியல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை