உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை

ராமேஸ்வரம்:-சூறாவளிக் காற்றால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை வித்தனர்.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து மன்னார் வளைகுடா கடல், வங்க கடலில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் கடந்த இரு நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.இதன்காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். 2000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டதால் மீனவர்கள் வேலை இன்றி வீடுகளில் முடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி