ஆபத்தான நிழற்குடை பயணிகள் பாதிப்பு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கமுதி விலக்கு ரோட்டில் இருந்து 3 கி.மீ., உள்ளது சித்திரங்குடி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காலை, மாலை நேரத்தில் மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 3 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்றனர்.இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மரத்தடியில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.