உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் புனரமைப்பு பணிகளில் தொய்வு  

கோயில் புனரமைப்பு பணிகளில் தொய்வு  

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலை புனரமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மழைக் காலங்களில் மண்டபங்களில் தண்ணீர் வடிந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது.கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து கோயிலை புனரமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கியது. முதல் கட்டமாக கோயிலின் மேற்பகுதியில் பழைய தட்டோடுகளை அகற்றும் பணி நடந்தது. கோயில் வளாகத்தை சுற்றிலும் சிமென்ட் பாதை அமைக்க பொருட்கள் இறக்கி வைக்கபட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் பணிகளை துவங்கவில்லை.பக்தர்கள் கூறுகையில், பருவமழை துவங்க உள்ளது. இந்நிலையில் தட்டோடுகள் அகற்றப்பட்டதால் மழை பெய்யும் போது நீர் வடியும். இதனால் கோயில் பிரகாரங்களில் பாதிப்பு ஏற்படும். ஆகவே பணிகளை விரைந்து முடிப்பதோடு, தட்டோடுகள் பதிக்கும் பணிகள் தரமாக செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ