உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூன் 14 இரவு மீன்பிடிக்க அனுமதி மீனவர் சங்கம் கோரிக்கை

ஜூன் 14 இரவு மீன்பிடிக்க அனுமதி மீனவர் சங்கம் கோரிக்கை

ராமேஸ்வரம்:மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க ஜூன் 14 இரவு 8:00 மணிக்கு தான் மீன்பிடிக்க அனுமதி வழங்கவேண்டும் என மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன் பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. இத்தடை முடிய இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் படகுகளை புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 14 அதிகாலை 12:00 மணியுடன் தடைக்காலம் முடிகிறது. ஆனால் சில மாவட்டங்களில் மீனவர்கள் ஜூன் 14 மாலை 5:00 மணிக்கே மீன்பிடிக்க செல்வதால் பிரச்னை ஏற்படுகிறது.ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:தடைக்காலம் முடிவதற்கு முன்பே பல மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் ஆவலுடன் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இவர்கள் ஜூன் 16ல் கரை திரும்புவர். கடலில் அதிக நேரம் இருப்பதால் ஐஸ்கட்டிகள் கரைந்து இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட மீன்கள் அழுகி விடுகிறது. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி., தலைமையில் மீனவர்கள், ஐஸ் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஜூன் 14 இரவு 8:00 மணிக்கு மேல் ஐஸ் கட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்