உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் காந்தாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் நேற்று காலை 10:30 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்கள் சித்தி விநாயகர், காந்தாரியம்மன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ