உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சரக்கு வாகனத்தில் ஆட்கள் பயணம்: விபத்து அபாயம்

சரக்கு வாகனத்தில் ஆட்கள் பயணம்: விபத்து அபாயம்

தொண்டி, : தொண்டியில் சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.தொண்டியில் சுப காரியங்கள் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கு சரக்கு வாகனங்களில் ஆட்கள் ஏற்றிச் செல்கிறார்கள். குறைந்த வாடகை என்பதால் கிராம மக்கள் சரக்கு வாகனத்தில் செல்வதை விரும்புகின்றனர். அதிகமான ஆட்கள் செல்வதால் வளைவான ரோட்டில் திரும்பும் போது வாகனம் கவிழ்ந்து விபத்துகள் நடக்கிறது. இதில் காயம் ஏற்பட்டு, இறப்புகளும் ஏற்படுகிறது. எனவே சரக்குவாகனத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறை மீறும் சரக்கு வாகன டிரைவர்கள் மீது போலீசார் நடவடிக்கை நடக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ