உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பளம்மன் கோயில் பொங்கல் விழா

பாம்பளம்மன் கோயில் பொங்கல் விழா

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி கிராமத்தில் பாம்பளம்மன் கோயில் 2ம் ஆண்டு பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. பத்து நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மியடித்தும் வந்தனர். விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் திரவியப் பொடி உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பொங்கல் வைத்து கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை