உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு

பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ராமேஸ்வரம் ஜெ.ஜெ., நகரில் பஜ்ரங்கதாஸ் பாபா சேவா அறக்கட்டளை நிர்வகிக்கும் அரசு உதவி பெறும் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 60 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் நாவல் மரம், புங்கன் மரம், பழக்கன்று களை பள்ளி தலைமை ஆசிரியர் மாலா சங்கரி, ஆசிரியர் சிவா, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகன், சாச்சா, ராமு மற்றும் மாணவர்கள் நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ