உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கொட்டுப்புளி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

கொட்டுப்புளி ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் -இளையான்குடி ரோடு வரவணி விலக்கிலிருந்து கொட்டுப்புளி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக வரவணி, கொட்டுப்புளி ஆகிய கிராமத்தினர் சென்று வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ரோடு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி கிராமத்தினர் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி