உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் 12 பேர் கைது

மீனவர்கள் 12 பேர் கைது

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி, காரைக்காலில் இருந்து செப்., 25ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் செல்வம், வேல்முருகன் உட்பட 12 பேர் இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் படகை மடக்கி பிடித்து, 12 பேரையும் சிறை பிடித்தனர். இவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை வீரர்கள், மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின், மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !