உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடியில் 4000 ஆமை முட்டைகள் சேகரித்து புதைப்பு

தனுஷ்கோடியில் 4000 ஆமை முட்டைகள் சேகரித்து புதைப்பு

ராமேஸ்வரம் : -தனுஷ்கோடி கடற்கரையில் 4000 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பக காப்பகத்தில் புதைத்து பாதுகாக்கின்றனர்.ஜன., முதல் ஏப்., வரை சீசனில் இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் தனுஷ்கோடி கடற்கரையில் குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். அதன்படி நேற்று 8 ஆமைகள் தனுஷ்கோடி கடற்கரையில் இட்டுச் சென்ற 1050 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர்.இதனை தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள பாதுகாப்பு பொரிப்பகத்தில் வனத்துறையினர் புதைத்தனர். ஜன., முதல் தற்போது வரை 4000 முட்டைகள் சேகரித்து பொரிப்பகத்தில் பாதுகாத்துள்ளனர்.இந்த முட்டைகள் 52 முதல் 60 நாட்களுக்கு பின் குஞ்சு பொரித்து குழியில் இருந்து ஆமை குஞ்சுகள் வெளியில் வரும். இதனை சேகரித்து கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை