உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் 7.700 கிலோ தங்கம் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் 7.700 கிலோ தங்கம் பறிமுதல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் 7.700 கிலோ தங்க கட்டியை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய கடத்தல்காரரை தேடி வருகின்றனர்.தங்கச்சிமடம் தர்கா பஸ் ஸ்டாப்பில் டூவீலரில் சந்தேகத்துக்குரிய இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் மடக்கி பிடித்த போது, தப்பி ஓடிவிட்டார். பின் டூவீலரில் பதுக்கி வைத்திருந்த 7.700 கிலோ தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4.80 கோடி. இந்த தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி வந்ததாகவும், மேலும் தங்க கட்டிகளை தங்கச்சிமடத்தில் பதுக்கி வைத்து உள்ளாரா எனவும் சுங்கத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். தப்பி ஓடிய கடத்தல்காரரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ