உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கடலாடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கடலாடி : கடலாடியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் 7ம் ஆண்டு வருடாபிஷேக விழாவும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.கடலாடியில் இருந்து முதுகுளத்துார் செல்லும் சாலையில் இருபுறமும் பாதுகாப்பான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.இருபுறமும் ஏராளமான கிராம மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.பந்தயத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பணம், குத்துவிளக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை, நகர் தேவர் இளைஞர் அணியினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ