உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அபிராமம் - -முதுகுளத்துார் ரோட்டில் தொடரும் நெரிசல் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

அபிராமம் - -முதுகுளத்துார் ரோட்டில் தொடரும் நெரிசல் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

கமுதி : அபிராமத்தில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கமுதி அருகே அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள ரோட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அபிராமத்தில் இருந்து முதுகுளத்துார் செல்லும் ரோட்டில் பேட்டை தெரு, முஸ்லிம் பஜார், செவ்வல் தோட்டம் பகுதியில் குறுகலான ரோடு என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது:அபிராமம் முதுகுளத்துார் ரோடு பேட்டை தெரு வழியாக செவ்வல்தோட்டம் வரை 2 கி.மீ., குறுகலான ரோடு என்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதியை கடக்க நீண்ட நேரம் ஆகிறது.போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வழிவிட்டு செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர்.முதுகுளத்துாரில் இருந்து மதுரை செல்லும் சிலர் அபிராமம் செல்லாமல் கண்ணாத்தான் முக்கு ரோட்டில் இருந்து பிரிந்து 5 கி.மீ., சுற்றி மதுரை செல்லும் ரோட்டின் வழியாக செல்கின்றனர். எனவே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை