/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
மூன்று நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
ராமேஸ்வரம்: பிரதமர் வருகையை யொட்டி 3 நாட்களுக்கு பின் நேற்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி வருகையை யொட்டி மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் அந்நியர்கள் ஊடுருவலை தடுக்க வேண்டி இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏப்., 4 முதல் 6 வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்டதால் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டுப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 3 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற ஆவலில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.