மாணவர்களுக்கு பாராட்டு
கீழக்கரை: சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு மற்றும் வருவாய் வழி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.மாணவர்கள் சுகதேவ், காருண்யா, அறிவரசு, பால சக்தி, லோகேஸ்வரி ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியர்கள் மனோன்மணி, அம்பேத்குமார், தங்கமணி, சரண்யா, சுதாகர், ஞானாயுதம், சசிகலா பாராட்டி பரிசுகள் வழங்கினர்.