ராமநாதபுரத்தில் ரத்த தான முகாம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர் அப்துல்லா நினைவு குருதி கொடை பாசறை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் அறக்கட்டளை சார்ந்த 50 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் வழங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. ரத்த வங்கி அதிகாரி டாக்டர் மணிமொழி, டாக்டர் கண்ணகி, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியை நாகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது ஏற்பாடுகளை செய்தார்.