உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் குஷி

காரங்காட்டில் படகு போக்குவரத்து துவக்கம்: சுற்றுலா பயணிகள் குஷி

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காட்டில் காற்றின் வேகம் குறைந்ததால் படகு போக்குவரத்து துவங்கியது. சுற்றுலா பயணிகள் மாங்குரோவ் காடுகளை கண்டு ரசித்தனர்.காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கையின் கொடையாக மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் வெளிமாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் பயணிகள் வருகை அதிகரித்தது. பாதுகாப்பு உடையணிந்து படகில் உற்சாகமாக சென்றனர். இப்பகுதியில் சில நாட்களாக பலத்த காற்று வீசியது. இதனால் படகு போக்குவரத்து நிறுத்தபட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பலத்த காற்று வீசியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மே 26 முதல் படகு போக்குவரத்து நிறுத்தபட்டது. காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று முன்தினம் முதல் படகு போக்குவரத்து துவங்கியது. சுற்றுலா பயணிகள் மாங்குரோவ் காடுகளை கண்டு ரசித்தனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை