உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி பகுதி அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின் குமார் 10. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்தான். நேற்று மாலை 4:00 மணிக்கு அரியக்குடி கிராம கண்மாய் பகுதியில் கால் கழுவு சென்றுள்ளான். நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இளைஞர்கள் கண்மாய் பகுதியில் தேடினர். தீயணைப்பு வீரர்களும் தேடிய நிலையில் இரவு 9:00 மணிக்கு மேல் அங்கிருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். கண்மாயில் மூழ்கி பலியானது தெரியவந்தது. சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை