டாக்டருக்கு மிரட்டல் மூவர் மீது வழக்கு
தொண்டி: தொண்டி அரசு ஆரம்பசுகாதார நிலைய டாக்டர் கோபிநாதன் 45. நேற்று முன்தினம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது விபத்தில் காயமடைந்த மல்லனுார் கிராமத்தை சேர்ந்த தென்னரசு 35, தாடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தென்னரசும் அவருடன் சென்ற சிலம்பரசன் 32, பழனிச்சாமி 50, ஆகியோர் இங்குதான் சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லையேல் வேலையை விட்டு துாக்கிவிடுவேன் என்று தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தனர். டாக்டர் அணிந்திருந்த முககவசத்தை கிழித்தனர். அவரது புகாரில் மூவர் மீதும் தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.