உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூர் விநாயகர் கோயிலில் தேரோட்டம்; இன்று காலை சதுர்த்தி தீர்த்தவாரி

உப்பூர் விநாயகர் கோயிலில் தேரோட்டம்; இன்று காலை சதுர்த்தி தீர்த்தவாரி

ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா ஆக.,18 ல் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. எட்டாம் நாளான ஆக.,25 ல் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி