உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசும்பொன்னில் அக்.20க்குள் அனைத்து பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவு

பசும்பொன்னில் அக்.20க்குள் அனைத்து பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவு

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 62-வது குருபூஜை, 117வது ஜெயந்தி விழா அக். 28--30ம் தேதி வரை நடக்க உள்ளதால் முன்னேற்பாடு பணிகளை அக்.20க்குள் முடிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.விழாவில் முதல்வர், அமைச்சர்கள், கட்சி, சமுதாய தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பின் அனைத்துத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது:பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடக்கிறது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு, மருத்துவம், ரோடு சீரமைப்பு உட்பட அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.கடந்த ஆண்டைப் போலவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளது.கூடுதல் மின் விளக்குகள், சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்படும். அக்.20க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை