உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அலுவலகம் முன் குளம்போல் குடிநீர்

அலுவலகம் முன் குளம்போல் குடிநீர்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே 10 நாட்களுக்கும் மேலாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி அலுவலகம் முன் குளம் போல் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ரோட்டோரத்தில் ராட்சத குழாய் மூலம் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே ரோட்டோரத்தில் செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வீணாகிறது. டி.எஸ்.பி., அலுவலகம்,கிளை நுாலகம், அங்கன்வாடி மையம் அருகே வீணாகும் குடிநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இங்கு தினந்தோறும் மக்கள் வந்து செல்லும் இடமாக இருப்பதால் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி