உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் எட்டு பேருக்கு ஜூலை 17 வரை காவல்

மீனவர்கள் எட்டு பேருக்கு ஜூலை 17 வரை காவல்

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் மீனவர்கள்8 பேரை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஜூன் 28ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற பாண்டியம்மாள் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து படகில் இருந்த 8 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 8 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை போலீசார் மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு மீண்டும் சிறையில் அடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை