உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

திருவாடானை: சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பயிர்க்கடன் ரூ. 2 லட்சமாக அறிவித்து 10 மாதங்களாகியும் வழங்கவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து ரூ.2 லட்சம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டதால் விவசாயிகள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர் கடன் பெறலாம் என அரசு அறிவித்தது. சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிணை இன்றி வழங்கப்படும் பயிர் கடனுக்கான உச்சரவரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஜன.,1 முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோக்களை கொடுத்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் ரூ.2 லட்சம் வழங்காமல் ரூ.1.60 லட்சம் மட்டும் வழங்கப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் அக்.,25ல் வெளியானது. அதனை தொடர்ந்து ஒழுங்குமுறை விதி பணிகளை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதால் விவசாயிகளிடமிருந்து அடையாளச் சான்று, முகவரி ஆதாரம், நில உரிமை பதிவுகள், பயிரிடப்பட்டுள்ள பயிர் களின் பதிவுகள், விவசாயி புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் சங்க அலுவலர்கள் ஈடுபட்டனர். நேற்று முதல் ரூ.2 லட்சம் வழங்க ராமநாதபுரம் துணைபதிவாளர் அலு வலகத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டது. இதனால் விவசாயிகள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை