உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க ஏழு நாட்களுக்கு பின் அனுமதி

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க ஏழு நாட்களுக்கு பின் அனுமதி

ராமேஸ்வரம்:சூறாவளி வேகம் தணிந்ததால் 7 நாட்களுக்கு பின் ராமேஸ்வரத்தில் 379 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்தனர்.டிச.7ல் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஸ்டிரைக், டிச.9ல் மீன்வளத்துறை அதிகாரியை கண்டித்து ஸ்டிரைக், டிச.11ல் சூறாவளியால் மீன்பிடிக்க தடையால் தொடர்ந்து 7 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சூறாவளியின் வேகம் தணிந்ததால் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 379 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி டோக்கன் வழங்கினர்.இதையடுத்து ஏழு நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க சென்றதால் அதிக மீன்கள் சிக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இருப்பினும் இலங்கை கடற்படை வீரர்கள் கெடுபிடி, தாக்குதலால் அச்சத்துடன் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி