உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் மீன்பிடிக்க தடை

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் மீன்பிடிக்க தடை

ராமேஸ்வரம்; வங்கக் கடலில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியதால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் மணிக்கு 45 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகிறது. இச்சூழலில் மீன்பிடிக்க சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் நேற்று முதல் ராமேஸ்வரம் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.இதனால் 400க்கு மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தணிந்து கடலில் இயல்பு நிலை திரும்பி பிறகே மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ