உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கலெக்டர் அலுவலக வளாகத்தில்  காலி இடங்களில்  குப்பை   குவியுது

கலெக்டர் அலுவலக வளாகத்தில்  காலி இடங்களில்  குப்பை   குவியுது

பட்டணம்காத்தான்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தினமும் குப்பை அகற்றப்படாமல் குவிந்துள்ளதால் காற்றில் பறந்த பாலிதீன் பைகள் காலி இடங்களில் குவிந்து கிடக்கிறது. அவற்றை அகற்ற வேண்டும்.பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. இது போக நீதிமன்றம், கல்வி, வேளாண் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்களுக்கு பல்வேறு பணிக்காக ஏராளமானவர்கள் வருகின்றனர்.ஊராட்சி நிர்வாகம் சார்பில் பெயரளவில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தினமும் அகற்றப்படாததால் குப்பை குவிந்து காற்றில் பாலிதீன் பைகள் பறந்து காலி இடங்களில் பரவியுள்ளது. எனவே கூடுதலாக குப்பை தொட்டிகள் வைக்கவும், குப்பையை தினமும் அகற்ற ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிடவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ