உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஅரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும்ஓய்வூதியர் அமைப்பினர் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் நகர் கிளை பணிமனை முன்பு நடந்தஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு ஊழியர்கள் அமைப்பின் பொறுப்பாளர் மணிக்கண்ணு, சி.ஐ.டி.யு., மத்திய சங்க நிர்வாகி பாஸ்கரன், ரவிக்குமார், நாகராஜன், துரைப்பாண்டி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் வரவுக்கும்செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டும். ஓய்வு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை