கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி உதவி மையம்
ராமநாதபுரம்;ராமநாதபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்திற்குள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி மையம் செயல்படுகிறது. மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர் கல்வி தொடர வேண்டும். அதற்குரிய ஆலோசனை வழங்கும் பொருட்டு கலெக்டர்அலுவலக தரைத் தளத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனை, உதவி மையம் செயல்படுகிறது. இங்கு 04567 --228 016, 228 021 ஆகிய தொலைபேசி எண்களில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கும் தெளிவு பெறலாம்.