உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலச்சாக்குளம் கிராமத்தில் குதிரை எடுப்பு விழா

மேலச்சாக்குளம் கிராமத்தில் குதிரை எடுப்பு விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் நிறைகுளத்து சங்கர அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.மேலச்சாக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிறைகுளத்து சங்கர அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முதுகுளத்துாரில் பிடிமண் வழங்கப்பட்டது. கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். அய்யனாருக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை நடந்தது. முதுகுளத்துாரில் தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகள், கருப்பண்ணசாமி, பேச்சியம்மன் பைரவர் உள்ளிட்ட தவழும் பிள்ளைகளை கிராம மக்கள் முக்கிய விதிகளில் ஊர்வலமாக துாக்கி வந்தனர். கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் நிறைகுளத்து சங்கர அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். மக்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை