மேலும் செய்திகள்
தெரு நாய்கள் தொந்தரவு கட்டுப்படுத்த கோரிக்கை
08-Sep-2025
திருவாடானை: திருவாடானையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். திருவாடானை வடக்குரத வீதியில் சுற்றித்திரியும் நாய்கள் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். வாசலில் படுத்திருப்பதால் பணம் எடுக்க செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் அச்சமாக உள்ளது என்றனர். இதே போன்று இரவு நேரத்தில் ரோட்டில் குறுக்கே வருவதால் வாகன விபத்துகள் நடக்கின்றன. எனவே நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
08-Sep-2025